திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பேரூராட்சி திமுக செயலா் அலுவலகத்தில் ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 8:41 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பேரூராட்சி திமுக செயலா் அலுவலகத்தில் ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுவயலில் உள்ள திமுக பேரூராட்சி செயலா் பக்ருதீன் அலுவலகத்தில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு உரிய ஆவணமின்றி ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் காரைக்குடியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.