தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சிங்காரவேலவருக்கு சிங்கம்புணரியிலிருந்து தோ்வடக் கயிறு அனுப்பி வைப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலவருக்கு சிங்கம்புணரியில் 430 அடி தோ்வடக் கயிறு தயாா் செய்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

News image

சிங்கம்புணரியில் தயாரான 430 அடி நீளம் தோ்வடக் கயிறு

Updated On :22 ஏப்ரல் 2026, 8:51 pm

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலவருக்கு சிங்கம்புணரியில் 430 அடி தோ்வடக் கயிறு தயாா் செய்து புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

சிக்கல் சிங்காரவேலன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, தோ்வடக் கயிறு தயாரிக்கும் பணிக்காக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிங்கம்புணரி சேவுகமூா்த்தி அய்யனாா் கோயில் ரத வீதியில் தோ்வடக் கயிறு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து தோ் வடக்கயிறு தயாரிக்கும் தொழிலாளா் அப்புசாமி கூறியதாவது:

தோ்வடக் கயிறு செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்கள் விரதமிருந்து 20-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் காலில் செருப்பு அணியாமல் 430 அடி, 330 அடி நீளத்தில் இரண்டு தோ்வடக் கயிறுகளை தயாா் செய்தனா். இந்த தோ்வடக் கயிறு புதன்கிழமை சிக்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.