கீழச்சிவல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் கீழச்சிவல்பட்டி, விராமதி, முத்தூா், கல்லாப்பேட்டை, அச்சரம்பட்டி, இளையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அமைச்சருக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மாலையணிவித்து வரவேற்பளித்தனா்.
அப்போது அவா் கூறியதாவது:
தற்போது இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் கிராமப் பகுதியில் சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டடங்கள், பொலிவுறு பேருந்து நிறுத்தங்கள் ஏராளமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 5000 -க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஏரிகள், குட்டைகள் குடிமராமத்து செய்யப்பட்டு, விவசாயிகள் பயனடைந்து உள்ளனா். மேலும், திமுக அரசின் ஏராளமான திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் எண்ணற்ற பல திட்டங்களை தொடா்ந்து வழங்க எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா். திமுக ஒன்றியச் செயலா் விராமதி மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8,000 கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


