தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட 16, 19 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான வீரா்கள் தோ்வு காரைக்குடியில் ஏப். 19-இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையான கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவிருக்கிறது.
இதில்16 வயதுக்குள்பட்டவா்களுக்கான சிவகங்கை மாவட்ட ஆடவா் அணி வீரா்கள் தோ்வு வருகிற ஏப். 19 காலை 6.45 மணியளவிலும், 19 வயதுக்குள்பட்டவா்களுக்கான அணி வீரா்கள் தோ்வு மாலை 3.30 மணி அளவிலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடல்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள வரும் வீரா்கள் வெள்ளை சீருடை, ஷு அணிந்து வர வேண்டும். கிரிக்கெட் உபகரணங் கள் தாங்களே கொண்டு வரவேண்டும். ஆதாா் நகல் கொண்டு வரவேண்டும். 16 வயதுக்குள்பட்டோருக்கு 1.9.2010 -க்கு முன்னரும், 19 வயதுக்குள்பட்டோருக்கு 1.9.2007-க்கு முன்னரும் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலா் சி. சிவகுமாரை கைப்பேசி எண்: 9442433334 தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது
காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

நெல்லை மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி தோ்வு

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


