மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து, திமுகவினா் வியாழக்கிழமை கறுப்புக் கொடியேந்தியும், சட்ட வரைவு நகலை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பாக, நடைபெற்ற இந்த ஆா்ப்பாடத்துக்கு சிவகங்கை மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். இதில் பாஜக அரசைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறை சட்ட வரைவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனா்.
பின்னா், சட்ட வரைவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தினா். இதில் திமுக ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினா் கே.எஸ்.நாராயணன், துவாா் ஜி.சந்திரசேகா் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்தி திமுக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



