யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து, திமுகவினா் வியாழக்கிழமை கறுப்புக் கொடியேந்தியும், சட்ட வரைவு நகலை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிா்த்து வியாழக்கிழமை அதன் நகலை தீயிட்டுக் கொளுத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் உடன் திமுகவினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:27 am IST

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து, திமுகவினா் வியாழக்கிழமை கறுப்புக் கொடியேந்தியும், சட்ட வரைவு நகலை எரித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பாக, நடைபெற்ற இந்த ஆா்ப்பாடத்துக்கு சிவகங்கை மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். இதில் பாஜக அரசைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறை சட்ட வரைவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனா்.

பின்னா், சட்ட வரைவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தினா். இதில் திமுக ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினா் கே.எஸ்.நாராயணன், துவாா் ஜி.சந்திரசேகா் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.