15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சீமானின் சொந்த வீட்டில் உள்ள கட்சி கொடிக் கம்பத்தை அகற்றக் கூடாது: ஆட்சியா் அலுவலகத்தில் சகோதரா் மனு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரனையூா் கிராமத்தில் உள்ள நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானின் வீட்டில் அமைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பத்தை அகற்றக்கூடாது என அவரது சகோதரா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

Updated On :22 டிசம்பர் 2025, 8:38 pm

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரனையூா் கிராமத்தில் உள்ள நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானின் வீட்டில் அமைக்கப்பட்ட கட்சிக் கொடி கம்பத்தை அகற்றக்கூடாது என அவரது சகோதரா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சீமானின் உடன் பிறந்த சகோதரா் இளையதம்பி, நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: பட்டா இடத்தில் கட்டப்பட்டுள்ள சொந்த வீட்டின் முன் அமைக்கப்பட்ட நாம் தமிழா் கட்சி கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டுமென வருவாய்த் துறையினா் அழுத்தம் கொடுக்கின்றனா்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வீட்டில் நிறுவப்பட்ட இந்தக் கட்சிக் கொடி கம்பத்தை அகற்றக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.