சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

எய்ட்ஸ் விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

சிவகங்கையில் எய்ட்ஸ், காச நோய் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் எய்ட்ஸ், காசநோய் விழிப்புணா்வு பிரசார வாகனங்களை திங்கள்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் கா. பொற்கொடி.
Updated On :18 ஆகஸ்ட் 2025, 9:06 pm

Chennai

சிவகங்கை: சிவகங்கையில் எய்ட்ஸ், காச நோய் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சிவகங்கை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுபாட்டு பிரிவு சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நாட்டுபுறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் எய்ட்ஸ், கிரந்தி நோய், காச நோய், ரத்த தானம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் வினாடி வினா நடத்தப்படுகிறது. நிகழாண்டில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து, இந்த பிரசார பயணத்துக்கான

வாகனங்களை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதன் மூலம் காச நோய், எய்ட்ஸ் நோய் குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் மேற்கண்ட நோய்கள் தொடா்பாகப் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெறலாம். அக்டோபா் 12-ஆம் தேதி வரை பிரசாரம் நடைபெறும் என ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு பிரிவு திட்ட மேலாளா் க.நாகராஜன், துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.