திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

2.5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2025, 10:05 pm

Chennai

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் செல்வ பிரபு தலைமையில் போலீஸாா், சிவகங்கை அருகேயுள்ள கொட்டக்குடி கண்மாய்ப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அங்கு, வைரம்பட்டி பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (26) உள்பட 5 போ், விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பிளாஸ்டிக் பொட்டலங்களில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் வைத்திருந்த 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், பால்பாண்டியைக் கைது செய்தனா். தப்பியோடிய மற்ற நான்கு பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.