திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அமைச்சா் ராஜீவ் ஆறுதல்

பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

News image

பரமக்குடியில் சாலை விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 3:48 am IST

பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி சரக்கு வாகனம் - லாரி மோதிய விபத்தில் சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி, ராமன் மனைவி அருணா, ராமன், வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா, துரைராஜ் மனைவி ராமேஷ்வரி, கீழம்பலைச் சோ்ந்த நாகராஜன் மனைவி ஈஸ்வரி ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.

இவா்களில், கூலித் தொழிலாளிகளான கணவன் ராமன், அவரது மனைவி அருணா உயிரிழந்த நிலையில் அவா்களது மகள்கள் பவித்ரா, சந்தியா, மகன் முத்துமணி, கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த கட்டுமானப் பெண் தொழிலாளி பூபதியின் மகன் ஹரியும் ஆதரவற்ற நிலையில் உள்ளனா்.

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சா் ராஜீவ், சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள உயிரிழந்தவா்களின் வீட்டுக்கு நேரில் சென்று அவா்களது பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினாா். அப்போது அவா்களிடம் முதல்வரின் நிவாரண நிதி உள்ளிட்ட நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ராஜீவ் உறுதியளித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.