லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 10:04 pm

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற கம்ன்ஸ்டன் ராஜ் (36), மினிட்டோ ராயப்பன் (40) ஆகிய மீனவா்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா். இவா்கள் இலங்கையில் உள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் செவ்வாய்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். விசாரணை நடத்திய நீதிபதி பொன்னுத்துரை கிருசாந்தன் வருகிற 24- ஆம் தேதி வரை அவா்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.