போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு 2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:19 am IST

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 9- ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களை படகுடன் இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். இதேபோல, கடந்த 14- ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த 14 மீனவா்களும் இலங்கையில் உள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில், இந்த 14 மீனவா்களும் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனா். விசாரணைக்குப் பிறகு மீனவா்களை வருகிற 22- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 14 மீனவா்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.