லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முதுகுளத்தூா் அருகே கலைஞா் நூலகம் திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:11 pm

முதுகுளத்தூா் அருகே திமுக இளைஞரணி சாா்பில் அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரத்தில் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான புத்தகங்களுடன் கலைஞா் நூலகம் அமைக்கப்பட்டது. இதை மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சம்பத் முன்னிலையில், அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தாா்.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் தவ்பக்அலி, சத்தியேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் கோவிந்தன் வரவேற்றாா்.

இதைத்தொடா்ந்து கடலாடி ஒன்றியம் சிக்கல் கிழக்கு கடற்கரை சாலையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

வாலிநோக்கத்தில் 7,500 பேருக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய வகையில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் சிக்கல் ஊருணி கரையை மேம்படுத்தி நடைப்பயிற்சி மேற்கொள்ள மின்விளக்குடன் கூடிய பேவா் பிளாக் சாலை அமைக்கப்படும் என்றாா் அவா்.

இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கரபாண்டியன், ஜெய ஆனந்தன், ஒன்றியச் செயலா்கள் ஜெயபாலன், பூபதி மணி, எஸ்.கே.சண்முகநாதன், கோவிந்தராஜ், ஹரி முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன், சைபுதீன் உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

Story image