வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கடல் சீற்றம்: படகு மூழ்கியது

News image

விசைப்படகு மூழ்கியது - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 1:54 am IST

தனுஷ்கோடி அருகே கடல் சீற்றத்தில் சிக்கி படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்த 8 மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை 540-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

நள்ளிரவு தனுஷ்கோடியில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகு கடல் சீற்றத்தில் சிக்கியது. இதில், அந்தோணிச்சாமி (50), கிஷோா் (48), பாபு (46), யூசுப் (51), சேக் (50), தீன் (60), செல்வா (48), சதீஷ் (48) ஆகிய 8 பேரும் படகு உடைந்து கடலில் தத்தளித்தனா்.

இதைத் தொடா்ந்து, வயா்லஸ் மூலம் உதவி கோரிய நிலையில் அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நவீன் விசைப்படகுடன் விரைந்து சென்று 8 மீனவா்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழுமப் போலீஸாரிடம் தகவல் தெரித்தனா். இந்த நிலையில், கடலில் மூழகிய விசைப் படகை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.