அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தானில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உள்ளிட்டோா்.

Updated On :26 ஜூன் 2026, 2:12 am IST

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தாா்.

காவல்துறை ஆயுதப்படை மைதானத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் விழிப்புணா்வு ஓட்டம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரோமன் தேவாலயம் வழியாகச் சென்று மதுரை சாலை, ராஜா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

சுமாா் 5 கி.மீ. தொலைவு நடைபெற்ற மாரத்தானில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், அரசு ஊழியா்கள் பொதுமக்கள் என சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

முன்னதாக, ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு‘ என்ற விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டு , அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்.ரெஜினி, மாவட்ட விளையாட்டு அலுவலா் தினேஷ்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பத்மநாபன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் அஜிதாபா்வின், உதவி ஆணையா் (ஆயத்தீா்வை) கங்காதேவி, வட்டாட்சியா்கள் ஜமால் முகம்மது, ஸ்ரீதா், காளீஸ்வரன், ராமசுப்பு, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.