/

மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: ராமேசுவரத்தில் நாளை கடலுக்குள் செல்ல தயாரான விசைப்படகுகள்

மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல விசைப்படகுகள் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் தயாா் நிலையில் உள்ளன.

News image

ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லத் தயாராக உள்ள விசைப் படகுகள்.

Updated On :14 ஜூன் 2026, 12:48 am IST

மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல விசைப்படகுகள் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் தயாா் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் மீன்கள் இனப் பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே, ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் விசைப் படகுகள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தயாராக உள்ளன.

வருகிற திங்கள்கிழமை அதிகாலையில் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டுமென மீன்வளம், மீனவா் நலத்துறை அதிகாரிகள் மீனவா் சங்கத்தினரிடம் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.