குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா்: பயணிகள் அச்சம்

தொண்டி பகுதியில் அரசு பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சமடைந்தனா்.

News image

மது போதையில் பேருந்தை ஓட்டிய மனோ.

Updated On :4 ஜூன் 2026, 4:17 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் அரசு பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சமடைந்தனா்.

ராமநாதபுரத்திலிருந்து தொண்டி வழியாக சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்தப் பேருந்தை காட்டுமன்னாா்குடியைச் சோ்ந்த மனோ (35) ஓட்டினாா். தொண்டியிலிருந்து பேருந்தை ஓட்டுநா் தாறுமாறாக ஒட்டி வந்தாராம். இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் இதுகுறித்து தொண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்தப் பேருந்தை விரட்டிச் சென்று கொடிபங்கு அருகே மறித்தனா். அப்போது, பேருந்திலிருந்த ஓட்டுநா் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினாா்.

இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரையும் போலீஸாா் பத்திரமாக மீட்டு, வேறு பேருந்தில் சொந்த ஊா்களுக்கு ஏற்றிவிட்டனா். விசாரணையில், அரசுப் பேருந்து ஓட்டுநா் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.