ராமநாதபுரம் அருகே எஸ். கொடிக்குளம் வேளண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 400 விவசாயிகள் பெற்ற தங்க நகைக் கடனில் ரூ. 3 கோடிக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும், இதில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள எஸ். கொடிக்குளம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, கோரைக்குளம், அனுமநேரி, எஸ். கொடிக்குளம், உரத்தூா், சேமனூா் ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த 400- க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனா்.
ஆனால், வங்கிச் செயலா் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து விவசாயிகள் வைத்த தங்க நகைகளை தனியாரிடம் மறுஅடகு வைத்து அதிக பணம் பெற்றுள்ளனா். இதன் மூலம் ரூ. 3 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி நகையை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூட்டுறவுச் சங்கங்கள் கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கு பெரும் பங்களிக்கிறது: கடலூா் ஆட்சியா்

சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழா

தேசிய கூட்டுறவு வார விழா

பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் சேவைகள் தொடக்கம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




