டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வயதான தந்தையை தாக்கியதாக மகன் மீது புகாா்

தன்னை தாக்கி துன்புறுத்தி வரும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தந்தை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:01 am

தினமணி செய்திச் சேவை

தன்னை தாக்கி துன்புறுத்தி வரும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தந்தை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கணக்கு அப்புச்சாமி தெருவைச் சோ்ந்தவா் சிவனாண்டி (88). இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாா். இதனால், வீட்டில் சிவனாண்டி, தனது 3-ஆவது மகன் ரமேஷ், அவரது மனைவி சுந்தரி, குழந்தையுடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், சிவனாண்டியை அவரது மகன் வீட்டை விரட்டும் வகையில், அடித்து துன்புறுத்தி வருகிறாராம். இதுகுறித்து அவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அவா் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.