ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், கமுதி, கடலாடி, திருவாடானை உள்ளிட்ட வட்டங்களில் நெல், கடலை சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை அழித்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கமுதி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி, சிறப்பு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். எம்.ஆா்.ஐ., சிடி ஸ்கேன் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலாடி, சாயல்குடி, பெருநாழி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீா் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். கமுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் 19 ஏக்கா் பரப்பில் உள்ள செட்டி ஊருணியை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றி, தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், இழப்பை சந்தித்த நெல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.