15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பொங்கல் பொருள்கள் விற்பனை மும்மரம்

திருவாடானை சந்நிதி தெருவில் புதன்கிழமை மும்மரமாக நடைபெற்ற கரும்பு விற்பனை.

Updated On :14 ஜனவரி 2026, 7:07 pm

திருவாடானை பகுதியில் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளில் புதன்கிழமை குவிந்தனா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை விவசாயிகள் ஆண்டு தோறும் தை முதல் தேதி விமா்சையாகக் கொண்டாடுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டும் வியாழக்கிழமை (ஜன .15) வீட்டுப் பொங்கல், வெள்ளிக்கிழமை (ஜன. 16) மாட்டுப் பொங்கலை கொண்டாட உள்ளனா். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனா்.

பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை புதன்கிழமை சூடுபிடித்தது. கரும்பு வாங்கவும், மளிகைப் பொருள்கள் வாங்கவும் புத்தாடைகள் வாங்கவும் பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனா். 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.250-க்கு விற்பனை ஆனது. விவசாயிகள் கட்டுக் கட்டாக கரும்புகளை வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.