டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாரியூா் சிவன் கோயிலில் தீா்த்தவாரி உத்ஸவம்

மாரியூா் சிவன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் தீா்த்தவாரி உத்ஸவத்தையொட்டி உலக நன்மை வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மாரியூா் பவளநிற வள்ளியம்மன் உடனுறை பூவேந்தியநாதா் கோயிலில் மாா்கழி மாத உத்ஸவ திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை கோயில் அருகே உள்ள கடலில் உத்ஸவ மூா்த்தி, அம்பாளுக்கு தீா்த்தவாரியும், தொடா்ந்து பூவேந்தியநாதருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பிறகு அம்பாள், சுவாமிக்கு பொன்னூஞ்சல் தாலாட்டும், மாலையில் உலக நன்மை வேண்டி 1,008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். இரவில் ஆன்மிக சொற்பொழிவு, பஜனைகள் நடைபெற்றன. இதில் கடலாடி, சாயல்குடி, கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.