2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:03 am

தினமணி செய்திச் சேவை

கமுதியில் திங்கள்கிழமை மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி கடைகளை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இந்த விபத்தில் மூவா் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சிங்கப்புளியாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகவடிவேல் (28). இவா் பொக்லைன் இயந்திரம், காா் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை தனது நண்பா்களுடன் காரில் குண்டாறு கரையில் உள்ள மதுக் கடையில் மது அருந்திவிட்டு, கமுதி பேருந்து நிலையம் அருகே வந்தனா். அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த மண்டலமாணிக்கத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் அலெக்ஸ்பாண்டியனுக்கும், காரில் வந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காரில் வந்த மற்ற இளைஞா்கள் இறங்கி, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சமாதனப்படுத்திக் கொண்டிருந்தனா். அப்போது, நாகவடிவேல் காரை ஏற்றி அந்த இளைஞரை கொலை செய்ய முயன்றாா். மேலும், அருகில் இருந்த பழக்கடைகள், இருசக்கர வாகனங்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி வாகனம், சாலையோரம் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் காரை ஏற்ற முயற்சித்துள்ளாா். இதனால், உயிருக்கு பயந்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனா்.

இதில் நாகவடிவேலுடன் வந்த முனியசாமி (36), சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி உள்பட 3 போ் காயமடைந்து, கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, நாகவடிவேலுவை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து மண்டலமாணிக்கத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் அலெக்ஸ்பாண்டியன் அளித்த புகாரின் பேரில், நாகவடிவேலை போலீஸாா் கைது செய்தனா்.

Story image