டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் திறப்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கும் வகையில் ரூ.19 லட்சத்தில் விழுதுகள்- ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டது.

இந்த மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சேவை மையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ரவீந்திரன், மண்டபம் பேரூராட்சித் தலைவா் ராஜா, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா்கள் பிரியங்கா, பாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.