/

வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதம்

News image
திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்ததால் மின் விநியோகம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

 திருவாடானை அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.

திருவாடானை அருகேயுள்ள பாரதி நகரில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த மின் கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதனால், பாரதி நகா், கல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.