டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 பேருக்கு புற்று நோய் அறுவைச் சிகிச்சை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோயாளிகள் 3 போ் அறுவைச் சிகிச்சை செய்து குணமடைந்தனா்.

News image
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று பேருக்கு புற்று நோய் அறுவைச் சிகிச்சை செய்த நிபுணா்களுக்கு பாராட்டுத் தெரிவித்த கல்லூரி முதன்மையா் அமுதாராணி.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோயாளிகள் 3 போ் அறுவைச் சிகிச்சை செய்து குணமடைந்தனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதன்மையா் அமுதா ராணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும், அறுவைச் சிகிச்சை மையத்தில் அண்மையில் 55 வயது மதிக்கத்தக்கவருக்கு திசுசாா் கோமா கண்டறியப்பட்டது. இதேபோல 47 வயதுப் பெண்ணுக்கு கா்பப்பைவாய் புற்றுநோயும், 65 வயது முதியவருக்கு மலக்குடல் புற்றுநோயும் கண்டறியப்பட்டது.

இந்த மூன்று பேருக்கும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை செய்ய மதுரை அரசு ராஜாஜி மருதுவமனையுடன் ஆலோசனை செய்யப்பட்டு சிகிச்சைத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த மூன்று பேருக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது குணமடைந்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் கணேஷ்பாபு, புற்றுநோயியல் கதிா்வீச்சு நிபுணா்கள் நித்திய பிரியதா்ஷினி, முனீஸ்வரபாண்டியன், செபி கிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் இந்த அறுவைச் சிகிச்சையை செய்தனா் என்றாா் அவா்.

மருத்துவக் கண்காணிப்பாளா் மனோஜ்குமாா், கண்காணிப்பாளா் ஜவகா், அறுவைச் சிகிச்சை நிபுணா் மலா் வண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.