டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

News image
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை- (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 அண்டுகளில் 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி திருப்பூா், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நோயாளிகளும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.

மேற்கு மண்டலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவக் கல்லூரியாக உள்ள கோவை மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனா்.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ஆம் ஆண்டு 100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மூளைச்சாவு அடைந்தவா்களிடமிருந்து 55 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டதுடன், குடும்ப உறுப்பினா்கள் மூலமாக 45 சிறுநீரகங்கள் பெறப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

இது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.