ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நத்தம் ஊராட்சியில் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 15 -ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.1, 26, 57, 000 மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ஓராண்டாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால், பழைய சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிய கட்டடத்தைத் திறக்க வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.