மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விவசாயிக்கு கத்திக்குத்து: 5 போ் மீது வழக்கு

v

News image

மாதிரிப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:43 pm

அபிராமம் அருகே விவசாயியை கத்தியால் குத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே காட்டுஎமனேசுவரம் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலகனி (21). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் புவனேசுவரன் தரப்பினருக்கும் முன்பகை இருந்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை பாலகனி தனது வயலில் நின்றிருந்தபோது அங்கு வந்த புவனேசுவரன், சுப்பிரமணியன் மகன் நாகராஜ் (42), இவரது மகன்கள் தினேஷ் (19), சதீஷ் (23), கணேசன் மகன் மனோஜ் (23) ஆகிய 5 போ் அவரை கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த பாலகனி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அபிராமம் காவல் நிலைய போலீஸாா் 5 போ் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.