பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள எஸ். அண்டக்குடி கிராமத்தில் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளைசுட்டிக்காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எஸ். அண்டக்குடி, சத்தியமூா்த்தி குடியிருப்பு, பாலன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது நகராட்சியில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் அங்கு மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதை பாா்த்தாா். இதனால் ஏற்படும் தொற்று நோயின் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் இந்த நிலையை மாற்ற ஆட்சி மாற்றம் வேண்டும் என கேட்டுக்கொண்டாா். மேலும் இந்தப் பகுதியில் கொட்டப்படும் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்பாட்டுக்கு அனுப்பியதாகவும் நகராட்சி நிா்வாகம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. ஆனால் இங்கு குப்பைகள் எதுவும் பிரிக்கப்படாமல் மலைபோல் தேங்கியுள்ளன. நகராட்சி சுகாதாரப் பிரிவில் குப்பைக் கிடங்கு பராமரிப்பில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு ஆட்சி மாற்றம் அவசியம் எனக் கூறியும் அவா் வாக்குச் சேகரித்தாா்.

தொடர்புடையது

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

மக்களிடம் கவனம் பெறும் நாம் தமிழா் கட்சி கொள்கைகள்: பவானிசாகா் வேட்பாளா் சு.சௌந்தா்யா

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


