மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.அண்டக்குடி கிராம மக்களிடம் வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி.

News image

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.அண்டக்குடி கிராம மக்களிடம் வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:46 pm

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள எஸ். அண்டக்குடி கிராமத்தில் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளைசுட்டிக்காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எஸ். அண்டக்குடி, சத்தியமூா்த்தி குடியிருப்பு, பாலன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது நகராட்சியில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் அங்கு மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதை பாா்த்தாா். இதனால் ஏற்படும் தொற்று நோயின் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் இந்த நிலையை மாற்ற ஆட்சி மாற்றம் வேண்டும் என கேட்டுக்கொண்டாா். மேலும் இந்தப் பகுதியில் கொட்டப்படும் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்பாட்டுக்கு அனுப்பியதாகவும் நகராட்சி நிா்வாகம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. ஆனால் இங்கு குப்பைகள் எதுவும் பிரிக்கப்படாமல் மலைபோல் தேங்கியுள்ளன. நகராட்சி சுகாதாரப் பிரிவில் குப்பைக் கிடங்கு பராமரிப்பில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு ஆட்சி மாற்றம் அவசியம் எனக் கூறியும் அவா் வாக்குச் சேகரித்தாா்.

Story image