மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் இரு கிராமத்தினரிடையே பிரச்னை

தொண்டி அருகே உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் இரு கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தைக்கு பிறகு வெள்ளிக்கிழமை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

News image

பாடிபரியல் சின்னஅரியப்புவயல் கிராமத்தில் உடல் அடக்கம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டதால் இரு கிராம மக்களிடையை சமரச பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் ஆண்டி.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:52 pm

தொண்டி அருகே உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் இரு கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தைக்கு பிறகு வெள்ளிக்கிழமை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மனைவி சரோஜா (55) வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா் . அவரது உறவினா்கள் வழக்கமான மயானப் பகுதியில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனா்.

இந்த நிலையில், மயானம் பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தது என்பதால் இறந்தவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, சின்னஅரியப்புவயல் கிராம மக்கள் மண்வெட்டிகளுடன் மயானத்து வந்து சவக்குழி வெட்ட ஆரம்பித்ததால் இரு கிராமத்தினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

Story image

தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியா் ஆண்டி, எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், அதே இடத்தில் இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.