தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.14 கோடி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.14 கோடி, உண்டியல் காணிக்கையாகக் கிடைத்ததாக இணை ஆணையா் தெரிவித்தாா்.

News image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Updated On :23 செப்டம்பர் 2025, 7:30 pm

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.14 கோடி, உண்டியல் காணிக்கையாகக் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாதமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அம்பாள் சந்நிதி முன் அமைந்துள்ள பழைய திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 1 கோடியே 14 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4 பவுன் தங்கம், 3.8 கிலோ வெள்ளி, 114 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாகக் கிடைத்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வா்கள் சிவக்குமாா், முருகானந்தம், பேஸ்காா்கள் கமலநாதன்,பி.ஆா்.ராமநாதன், பஞ்சமூா்த்தி ஆகியோருடன் ஆன்மிக இறை பக்தா்கள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.