டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

எஸ்.ஐ.ஆா். பணியிலிருந்து விடுவிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆட்சியரிடம் மனு

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:06 pm

Chennai

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆா்.) பணியிலிருந்து விடுவிக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்திய தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் மாநில அரசு ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், இந்தப் பணியை மேற்கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லை எனக் கூறியும், தங்களை இந்தப் பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை அங்கன்வாடி ஊழியா்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எம். சிவாஜி, அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. மல்லிகா, மாவட்டத் தலைவா் எம். உமாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.