மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேவிபட்டனம் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:54 pm

தேவிபட்டனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா், மாணவ, மாணவிகளைச் சந்தித்து அவா்களின் கல்வித் திறன் குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு வழங்கும் உணவின் தரத்தை ஆய்வு செய்ததுடன், சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.

பின்னா், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பாகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, தேவிப்பட்டினத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடா்பாகக் கேட்டறிந்தாா்.

பொதுமக்கள் மனுக்களை சிரமமின்றி வழங்க ஏதுவாக அந்தந்தத் துறை அலுவலா்கள் பணிபுரிய வேண்டுமெனவும், பெறப்படும் மனுக்களை அலுவலா்கள், பணியாளா்கள் உரிய ஆவணங்களுடன் கணினியில் பதிவு செய்ய வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.