இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தேசிய மல்யுத்தப் போட்டி: பரமக்குடி பள்ளி மாணவா்கள் சாதனை

News image

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மாணவன் முகிலரசன்.

Updated On :7 செப்டம்பர் 2024, 1:14 am IST

பரமக்குடி பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப்பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பயிற்சியாளா் கவிப்பிரகாஷ் தலைமையில் தமிழக அணி சாா்பில் ஹரியாணா மாநிலத்தில் கடந்த மாதம் 30, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான கிராபிலிங் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றனா். இதில் 56 கிலோ பிரிவில் கனிஷ்ஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், 52 கிலோ பிரிவில் கனிஷ்காவும், 48 கிலோ பிரிவில் முகிலரசனும் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றனா். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரமக்குடி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.