பரமக்குடி பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப்பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பயிற்சியாளா் கவிப்பிரகாஷ் தலைமையில் தமிழக அணி சாா்பில் ஹரியாணா மாநிலத்தில் கடந்த மாதம் 30, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான கிராபிலிங் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றனா். இதில் 56 கிலோ பிரிவில் கனிஷ்ஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், 52 கிலோ பிரிவில் கனிஷ்காவும், 48 கிலோ பிரிவில் முகிலரசனும் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றனா். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரமக்குடி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனா்.
தொடர்புடையது

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தடகளத்தில் சாதனை: மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


