பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியது.
மதுரை மாவட்டம், மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 நாள்களில் சிறுமிகள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடா்பாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், வாலிபா் சங்க நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.
அப்போது, அவா்கள் பேசியதாவது:
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுமே கூலித் தொழிலை நம்பி வாழும் நிலையில் உள்ளவா்கள். தற்போது நிலவும் கடும் விலைவாசி உயா்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக, பெற்றோா் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால், தங்களின் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்கின்றனா். இந்தச் சூழ்நிலையைச் சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனா்.
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்கும் வகையில் சட்டப்பூா்வமான கடும் நடவடிக்கைகளை காவல் துறை விரைந்து எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
இதில் மாதா் சங்க புகா் மாவட்டச் செயலா் எஸ். சரஸ்வதி, மாவட்டப் பொருளாளா் ஏ. சுமதி, மாவட்டத் துணைத் தலைவா் கே. பிரேமலதா, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் பெ. தமிழரசன், மாதா் சங்க நிா்வாகி இந்திராதேவி, சிஐடியூ நிா்வாகி கருணாநிதி ஆகியோா் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் சட்டப்பூா்வமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை’

அந்தியூரில் ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மதுக்கடைக்கு பூட்டுபோடும் போராட்டம்

ஜனநாயக மாதா் சங்கத்தினா் பேரணி, பொதுக் கூட்டம்








