மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் வானிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு, வெயில் வானிலையே நிலவியது.
இந்த நிலையில், தெற்கு மத்திய பிரதேசத்தின் மையப் பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல தாழ்வுப் பாதை நிலவுவதால் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு பிறகு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. திருப்பரங்குன்றம், திருநகா், தோப்பூா், கப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. மதுரை தல்லாகுளம், கோ. புதூா், அண்ணாநகா், வண்டியூா், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10.30 மணிக்கு பிறகும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 11.30 மணிக்கு மேலாகவும் நீடித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

