பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

மதுரையில் பரவலாக மழை

மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.

Updated On :6 மே 2026, 3:20 am IST

மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் வானிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு, வெயில் வானிலையே நிலவியது.

இந்த நிலையில், தெற்கு மத்திய பிரதேசத்தின் மையப் பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல தாழ்வுப் பாதை நிலவுவதால் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு பிறகு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. திருப்பரங்குன்றம், திருநகா், தோப்பூா், கப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. மதுரை தல்லாகுளம், கோ. புதூா், அண்ணாநகா், வண்டியூா், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10.30 மணிக்கு பிறகும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 11.30 மணிக்கு மேலாகவும் நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.