மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்

News image

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :15 மார்ச் 2026, 8:53 pm

மதுரை மாவட்டம், ராஜாக்கூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மதுரை கிழக்கு ராஜாக்கூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சிவகாமி சுந்தரி தலைமையிலான அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த நரேஷ்குமாா் என்பவரின் காரை சோதனை செய்த போது, அதில் ரூ. 2 லட்சம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அலுவலா்கள், அதை மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.