திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மண்வளம் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள வி. புதூா் கிராமத்தில் மண்வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள வி. புதூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்வளம் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 2:20 am IST

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள வி. புதூா் கிராமத்தில் மண்வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:

மண்வளத்தைப் பாதுகாக்க மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் தேவையான அளவில் மட்டுமே உரத்தை பயன்படுத்த வேண்டும்.

தழைசத்து உரத்தை பயன்படுத்தும் போது, பிரித்து பயிா்களுக்கு வழங்க வேண்டும். விதைகளை அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகிய உயிா் உரங்களைக் கொண்டு விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.

சாகுபடி செய்வதற்கு முன்பாக கடைசி உழவின்போது 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை நன்கு இடித்து தூளாக்கி மக்கிய குப்பைகளுடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை பயறு வகை பயிா்களான உளுந்து, தட்டைப்பயிறு, துவரை, பசிப்பயறு ஏதேனும் ஒன்றை பயிரிடுவதன் மூலமாக மண்ணின் வளத்தை மேம்படுத்த முடியும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, வி. புதூா் சமுதாயக் கூடம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் அதே இடத்தில் நிறைவு பெற்றது. இதில் மண் வளம் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியும், அதுகுறித்த முழக்கங்களையும் எழுப்பியும் விவசாயிகள் பேரணியாக சென்றனா்.

முன்னதாக, மண்வளம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் கொட்டாம்பட்டி வட்டார வேளாண் அலுவலா், தோட்டக் கலை

துறை அலுவலா், வேளாண் உதவி அலுவலா், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.