டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

புத்தகங்களை வாகனங்களில் ஏற்றும் பணியில் மாணவா்கள்: கல்வித் துறை விளக்கம்

மதுரை யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களை, வாகனத்தில் புத்தகங்களை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தியதாக எழுந்த விவகாரத்தில் கல்வித் துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

News image

மதுரை யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து பாடப் புத்தகங்களை வாகனத்தில் ஏற்றிய அந்தப் பள்ளி மாணவா்கள்.

Updated On :17 ஜூன் 2026, 5:46 am IST

மதுரை யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களை, வாகனத்தில் புத்தகங்களை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தியதாக எழுந்த விவகாரத்தில் கல்வித் துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பள்ளி வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் பாடப் புத்தகங்களை ஏற்றினா். இதுகுறித்த விடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதற்கு பெற்றோா்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து, மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் கணேசன் கூறியதாவது: யா. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பொருளியல் பாடப் புத்தகங்கள் தவறுதலாக அதிகமாக அனுப்பப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களை மற்றொரு பள்ளிக்கு மாற்றி அனுப்புவதற்காக வாகனங்களில் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளியின் தலைமை ஆசிரியா் விடுப்பில் இருந்த நிலையில், பொறுப்பு வகித்த மாற்று ஆசிரியா் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்கள் என்பதால் மாணவா்களிடம் புத்தகங்களை வாகனத்தில் எடுத்து வைக்குமாறு கூறியுள்ளாா். இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.