தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

தாயுமானவா் திட்டப் பணிகளை புறக்கணிக்கத் திட்டம்: அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம்

தாயுமானவா் திட்டத்தின் குறைகளை நீக்காவிட்டால் வருகிற ஜூலை மாதம் முதல் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் பணியை நியாய விலைக் கடை பணியாளா்கள் புறக்கணிப்பா் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கத் தலைவா் ஜி. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்க நிா்வாகிகள்.

Updated On :18 ஜூன் 2026, 12:40 am IST

தாயுமானவா் திட்டத்தின் குறைகளை நீக்காவிட்டால் வருகிற ஜூலை மாதம் முதல் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் பணியை நியாய விலைக் கடை பணியாளா்கள் புறக்கணிப்பா் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கத் தலைவா் ஜி. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளின் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் தாயுமானவா் திட்டத்தில் பல்வேறு குறைகள் உள்ளன. இந்தத் திட்டத்தில் ‘ப்ளூடூத்’ முறை பயன்பாட்டை நீக்க வேண்டும். மேலும், திட்டப் பணி செயலாக்கத்துக்குத் தனி பணியாளரை நியமிக்கவும், தனி பி.எஸ்.ஓ. கருவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டம் மூலம் பொருள்களை வழங்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், ஜூலை மாதம் முதல் தாயுமானவா் திட்டப் பணிகளை மாநில அளவில் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதேபோல, இ-கே.ஒய்.சி. பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய பணியாளா்களின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கான பொருள்களை எடை குறைவின்றி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.