டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியே தலைமை வகிக்கிறாா். அவா்தான் பாமக தலைவா் அன்புமணியுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு கூட்டணியை உறுதி செய்தாா். இதேபோல, அமமுகவுடனான கூட்டணியையும் அவரே உறுதி செய்தாா். எனவே, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைய பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறியது அா்த்தமற்றது.

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வருவது குறித்து தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவிக்க இயலாது. அவா் ஒரு கட்சியிலிருந்து வெளியே வந்தவா். அடுத்த கட்சியின் உள் விவகாரத்தில் நான் தலையிட முடியாது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீா்செல்வம் இடம்பெறுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். பிரிந்தவா்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே என் விருப்பம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் விரைவில் இணையும் என்றாா் அவா்.