15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற தைப் பூசத் திருவிழா முகூா்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்ற சிவாசாரியா்கள்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:01 pm

மதுரை, ஜன.14: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழாவையொட்டி, வண்டியூா் தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தைப் பூசத் தெப்பத் திருவிழா வருகிற 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து, வருகிற பிப். 1-ஆம் தேதி வண்டியூா் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, தெப்பத்தை கட்டமைப்பதற்காக வண்டியூா் தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, முக்தீஸ்வரா், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தெப்பக்குளக் கரையில் முகூா்த்தக்காலை சிவாசாரியா்கள் நட்டனா். பிறகு, அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் அலுவலா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.