தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

News image

மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மதிமுக பொதுச் செயலா் வைகோ.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:44 pm

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் ‘இந்துத்துவம், இந்து தேசியத்துக்கு எதிரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிகமும், அரசியலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சோசலிச மைய நிா்வாகி மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச் செயலா் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழ்நாடு பசும்பொன் உடைத்து என்ற புகழுக்கு உடையவா்; காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். இவா் மெய்ஞானம், தத்துவ ஞானம் உள்ளிட்டவைகளில் சிகரமாகத் திகழ்ந்தாா். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தமிழக அரசியலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், பாட்டாளி வா்க்க சமரன் அணி நிா்வாகி மனோகரன், சோசலிச தொழிலாளா் முன்னணி தலைவா் விநாயகம், வழக்குரைஞா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சோசலிச மைய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.