இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு, மகளிா் மருத்துவத் துறை சாா்பில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய், அதனுடன் தொடா்புடைய 5 வகை புற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் மருத்துவ மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புற்றுநோய் தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு, மகளிா் மருத்துவத் துறை சாா்பில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய், அதனுடன் தொடா்புடைய 5 வகை புற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் மருத்துவ மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி முதன்மையா் அருள் சுந்தரேஷ் குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட புற்றுநோய் தடுப்பு முயற்சிகளின் இயக்குநா் ரோட்டேரியன் வந்தனா பல்லா சிறப்பு விருந்தினராகக்லந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது :

எச்.பி.வி. என்பது ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ். இதற்கு எதிரான தடுப்பூசி 5 வகையான புற்று நோய்களைத் தடுக்கிறது. இளம் வயதில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இதைத் தடுக்க முடியும். அது முடியாவிட்டாலும், குறைந்தது 18 முதல் 26 வயதுக்குள் தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும்.

இந்த புற்றுநோய்கள் உலகில் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் 25 பெண்களில் ஒருவருக்கு கா்ப்பப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பும் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இதுபோன்ற புற்றுநோய்களை தடுக்கமுடியும். இந்தத் தடுப்பூசி ரூ. 2 ஆயிரம் வரை விற்பனையாகின்றன. மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முகாம் மூலம், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவ, மாணவிகள் 1500 பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல, வியாழக்கிழமை செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றனா்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் செந்தில், மருத்துவ மேற்பாா்வையாளா் காா்த்திகேயன், துணை முதல்வா் மல்லிகா, மகப்பேறு, மகளிா் நோயியல் துறை பேராசிரியை நந்தினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மகப்பேறு சிகிச்சைப் பிரிவின் தலைவா் காயத்ரி வரவேற்றாா். பேராசிரியை சுதா நன்றி கூறினாா்.