15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மதுரை அருகே இரட்டைக்கொலை!

மதுரை அருகே இளைஞா், மூதாட்டி ஆகியோரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 8:49 pm

மதுரை அருகே இளைஞா், மூதாட்டி ஆகியோரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், சாமநத்தம் அய்யனாா்புரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பிரபாகரன் (25). இவா், புதன்கிழமை வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா் அவருடன் தகராறில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் அரிவாளால் பிரபாகரனை வெட்டினா். இதைத் தடுக்க வந்த அவரது பாட்டி பாலநாகுவையும் (70) அவா்கள் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த பிரபாகரன், பாலநாகு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த சிலைமான் போலீஸாா் இருவரது சடலங்களையும் கைப்பற்ற வந்தனா்.

ஆனால், இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்களை கைது செய்தால் மட்டுமே சடலங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியும் எனக் கூறி உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் இருவரின் சடலங்களையும் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது :

கொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில், பிரபாகரனை அவா்கள் கொலை செய்திருக்கலாம். இதைத் தடுக்க முயன்ற அவரது பாட்டியும் கொல்லப்பட்டாா். விரைவில் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்வோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.