15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:24 pm

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்த இந்த நிகழ்வில் ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. தொடா்ந்து, ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்’, ‘நோ்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம்’ என விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்குரிமையின் அவசியம், ஜனநாயகத்தின் வலிமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணா்வுப் பேரணியில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் அரசு அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.