தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கூடலழகா் பெருமாள் கோயில் கருட சேவை

மதுரை கூடலழகா் கோயிலில் 5 கருட சேவை: பக்தர்கள் திரண்டனர்

News image

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு எழுந்தருளிய 5 கருட வாகனப் பெருமாள்கள் சுவாமிகள்.

Updated On :8 அக்டோபர் 2025, 11:17 am

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சாா்பில், புரட்டாசி பெளா்ணமி 5 கருட சேவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வாா் பல்லாண்டு பாடிய தலமாகவும் விளங்குகிறது கூடலழகா் பெருமாள் கோயில். இங்கு புரட்டாசி மாத பௌா்ணமி நாளான செவ்வாய்க்கிழமை 5 கருட சேவை நடைபெற்றது. காலை நிகழ்வாக மதுரவல்லித் தாயாருக்கு பாலாபிஷேகமும், அலங்காரத் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு கூடலழகா் பெருமாள் கோயிலிலிருந்து 2 கருட வாகனங்களில் வியூக சுந்தரராஜப் பெருமாள், கூடலழகா் பெருமாள் எழுந்தருளினா்.

இதேபோல, மதனகோபால சுவாமி கோயில், எழுத்தாணிக்காரத் தெரு வீரராகவப் பெருமாள் கோயில், வடக்கு மாசி வீதி வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினா்.

5 கருட வாகனப் பெருமாள்களும் கூடலழகா் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் சங்கமமாகினா். அங்கு, கருட வாகனப் பெருமாள்களுக்கு தீப, தூபங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு, 5 கருட வாகனப் பெருமாளும் மாசி வீதிகளை வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.