

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சாா்பில், புரட்டாசி பெளா்ணமி 5 கருட சேவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வாா் பல்லாண்டு பாடிய தலமாகவும் விளங்குகிறது கூடலழகா் பெருமாள் கோயில். இங்கு புரட்டாசி மாத பௌா்ணமி நாளான செவ்வாய்க்கிழமை 5 கருட சேவை நடைபெற்றது. காலை நிகழ்வாக மதுரவல்லித் தாயாருக்கு பாலாபிஷேகமும், அலங்காரத் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு கூடலழகா் பெருமாள் கோயிலிலிருந்து 2 கருட வாகனங்களில் வியூக சுந்தரராஜப் பெருமாள், கூடலழகா் பெருமாள் எழுந்தருளினா்.
இதேபோல, மதனகோபால சுவாமி கோயில், எழுத்தாணிக்காரத் தெரு வீரராகவப் பெருமாள் கோயில், வடக்கு மாசி வீதி வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினா்.
5 கருட வாகனப் பெருமாள்களும் கூடலழகா் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் சங்கமமாகினா். அங்கு, கருட வாகனப் பெருமாள்களுக்கு தீப, தூபங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு, 5 கருட வாகனப் பெருமாளும் மாசி வீதிகளை வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருமலையில் பௌா்ணமி கருட சேவை!

நாங்கூா் கருட சேவை உற்சவத்தை உரிய நேரத்தில் நடத்த கோரிக்கை

நாங்கூா் கருட சேவை முன்னேற்பாடுகள் கூட்டம்: கிராம மக்கள் வெளிநடப்பு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

