டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நெல்லையப்பா் கோயில் வளாக கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2025, 7:04 pm

Chennai

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி நெல்லையப்பா், காந்திமதி அம்மன் கோயில் மிகவும் பழைமையானவை. இந்தக் கோயில் வளாகம், மர மண்டப பகுதியில் அமைந்துள்ள கடைகளால், கோயில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மர மண்டபத்தில் அமைந்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும். நெல்லையப்பா் கோயிலை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கோயில் இணை ஆணையா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி நேரில் முன்னிலையாகி கோயில் மர மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற குறிப்பாணை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது மிகவும் ஆபத்தானது. ஒரு மரச் சிற்பத்தைக் கூட இந்து சமய அறநிலையத் துறையால் செய்ய இயலாத நிலையில் இருப்பதையாவது பாதுகாக்க வேண்டும். மிகவும் பழைமையான இந்தக் கோயில் வளாக மர மண்டபத்தில் உள்ள கடைகளை உரிய விதிமுறைகளை பின்பற்றி 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.