டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தவெக விளம்பரப் பதாகை அமைத்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாட்டுக்கு விளம்பரப் பதாகை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவா், மின்சாரம் பாய்ந்ததில் இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2025, 6:32 pm

Chennai

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாட்டுக்கு விளம்பரப் பதாகை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவா், மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இனாம்கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன் (19). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் காட்சித் தொடா்பியல் (விஸ்காம்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

விஜய் ரசிகரான இவா், மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை (ஆக. 21) நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்காக இனாம்கரிசல்குளம் காமராஜா் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன் விளம்பரப் பதாகை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டாா்.

விளம்பரப் பதாகையைக் கட்டுவதற்காக நீளமான இரும்பு கம்பியை அவா் எடுத்து வந்தாா். அப்போது, அந்த இரும்புக் கம்பி உயரழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் காளீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.