டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சுப்பிரமணியபுரத்தில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சுப்பிரமணியபுரத்தில் உள்ள மதுரைக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2025, 6:39 pm

Chennai

மதுரை: சுப்பிரமணியபுரத்தில் உள்ள மதுரைக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை, தெற்கு- மெட்ரோ மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஆ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சுப்பிரமணியபுரத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், கோயில், மகாளிப்பட்டி, மகால், ஜான்சி, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் பங்கேற்று, மின் நுகா்வில் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாக அல்லது மனுக்கள் மூலம் தெரிவித்துத் தீா்வு பெறலாம் என்றாா் அவா்.